-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 3 செப்டம்பர், 2016

சுன்னத்தான மற்றும் நஃபிலான நோன்பின் சிறப்புகள்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
இறையச்சமுடைய முஸ்லிம்  ரமழான்  அல்லாத மாதங்களிலுள்ள நஃபிலான  நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் [துல்ஹஜ் பிறை 9] மற்றும் முஹர்ரம் பிறை 9.10 போன்ற காலங்களிலும் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும்  சிறந்த அமலாகும்.

இது குறித்து நபிமொழிகள்..
அபூ கதாதா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, ''அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும '' என்று கூறினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லீம்]

இப்னு அபபாஸ் [ரலி] அவர்கள் கூறினார்கள்.. ''நபி [ஸல்] அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்,, அதைப்  பிறருக்கும் ஏவினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]

அபூ கதாதா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது   ''அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்'' எனக் கூறினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]


இப்னு அபபாஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ]

அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அதை நோன்பின் மாண்பை பற்றி இறைத்தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''எவர் ரமழான்  மாதம்  முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுதும் நோன்பு நோற்றவராவார்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. ''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத்  லுஹா தொழுவது மற்றும் தூங்கச்  செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி [ஸல்] அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.''
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

அபூதர்தா [ரலி] அவர்கள் கூறியதாவது..  ''எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, லுஹா தொழுவது இன்னும் வித்ரு  தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.''
[ஸஹீஹ் முஸ்லிம் ]

அப்துல்லாஹ் இப்னு அம்ரு [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13,14,15வது  நாட்களைக் குறிக்கும் . அதனை அய்யாமுல் பீல் என்ற கூறப்படும். அவ்வாறே நபி [ஸல்] அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.

முஆதத்துள் அதவிய்யா [ரலி] அவர்கள் கூறினார்கள்..நான் அன்னை ஆயிஷா [ரலி] அவர்களிடம்  ''நபி [ஸல்] அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?'' என்று கேட்டேன். அன்னையவர்கள்  ''ஆம்!'' ''மாதத்தின் எந்தப்  பகுதியில் நோற்றார்கள்?'' எனக் கேட்டேன். ''மாதத்தின் எந்தப்  பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி [ஸல்] அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை'' என பதிலளித்தார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு ''இறுதி கடமையான ஹஜ்''       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!